கோடை வெப்பத்தால் ஏற்படும் வாய் துர்நாற்றம் மற்றும் செரிமான கோளாறுகளை நீக்க ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மெல்லுவது உடனடி பலனை தரும். இது உடல் சூட்டை தணிப்பதோடு, மன அழுத்தத்தை குறைத்து நரம்பு மண்டலத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. ஏலக்காயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் தொண்டை வலி மற்றும் சுவாச கோளாறுகளையும் போக்க வல்லவை.




