மத்திய அரசின் புதிய திட்டத்தின்கீழ், மே மாதத்தில் முதல்முறையாக பணியில் சேர்ந்த லட்சக்கணக்கான இளம் ஊழியர்களின் EPFO கணக்குகளில் ரூ.3,000 வரை நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. மாதச் சம்பளம் ரூ.1 லட்சம் வரை உள்ளவர்களின் முதல் மாத PF சந்தாவை அரசே ஏற்று, அதிகபட்சமாக ரூ.15,000 வரை 3 தவணைகளாக வழங்கும் இந்நடவடிக்கை அவர்களின் நிதி பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது. இத்துடன், PF பணத்தை ATM மூலம் எடுக்கும் வசதி மற்றும் ‘Passbook Lite’ சேவை போன்ற எளிய ஆன்லைன் சீர்திருத்தங்களையும் EPFO நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.




