தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், அது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தாமதமாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் முடிவுகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால், அவை முடிவடைந்த பிறகே இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.
மேலும், இந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்த சட்டப்படி இன்னும் 6 மாத அவகாசம் உள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.




