நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 25-வது நினைவு தினத்தையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை அடையாறில் அமைந்துள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு, அமைச்சர் ராஜ்மோகன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள், திரையுலகினர் மற்றும் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டு, சிவாஜி கணேசனின் கலைப்பணிகளையும், தமிழ்த் திரையுலகில் அவர் ஆற்றிய பங்களிப்பையும் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினர்.




