பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) சார்பில் 545 Local Bank Officer (LBO) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்களும், குறைந்தது ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்களும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது தளர்வும் வழங்கப்படும்.
இந்தப் பணிக்கான தேர்வு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் நடைபெறும். தேர்வில் வெற்றி பெறும் நபர்களுக்கு மாதம் அதிகபட்சமாக ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும்.
வங்கி துறையில் நிரந்தர வேலைவாய்ப்பை எதிர்நோக்கும் பட்டதாரிகளுக்கு இது சிறந்த வாய்ப்பாகும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




