2010-ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு அடித்தளமிட்டது காங்கிரஸ்தான் என்றும், தற்போது மாணவர்களின் உணர்வுகளை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி போராட்டம் நடத்துவதாகவும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் விமர்சித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் நீட் போராட்டக்காரர்களைக் கைது செய்யும் தவெக அரசு, டெல்லியில் அனுமதியின்றி போராடி கைதான ராகுல் காந்திக்கு ஆதரவாகப் பேசுவது அவர்களின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.




