இந்தி தொலைக்காட்சி நடிகை அதிதி சர்மா, தனது கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது மும்பை போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். குடும்ப வன்முறைக்கு ஆளானதாகவும், தொடர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், தனக்குச் சொந்தமான நகைகளை அபகரித்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த புகாரை தொடர்ந்து, அவரது கணவர், மாமனார் மற்றும் மாமியார் மீது பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் இந்தி தொலைக்காட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




