தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 22 கேரட் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 அதிகரித்துள்ளது.
நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.14,200-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும் விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,220-க்கும், சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.1,13,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 5ஆம் தேதி ஒரு சவரன் ரூ.1,07,840-க்கு விற்பனையானது. அதன்பிறகு 9 நாட்களில் சவரன் விலை ரூ.5,920 உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை தொடர்ந்து புதிய உச்சங்களை நோக்கி நகர்ந்து வருவது நகை வாங்க திட்டமிடுபவர்களிடையே கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.




