சென்னை பெரம்பூரில் ரூ.300 கோடியில் புதிய மருத்துவமனை! முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்பு!

 

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை மற்றும் சுற்றுலாத்துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

 

இதில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய், சென்னை பெரம்பூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் புதிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என தெரிவித்தார்.

 

மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி ஆண்டுக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.

 

புதிய மருத்துவமனை மற்றும் மருத்துவக் காப்பீட்டு நிதியுதவி உயர்வு தொடர்பான இந்த அறிவிப்புகள் பொதுமக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.

Read Previous

வண்டல் மண் விவகாரம்: சட்டப்பேரவையில் அதிமுக அமளி.. வெளிநடப்பு!

Read Next

“காவல்துறை அத்துமீறல்களுக்கு முடிவே இல்லையா?” – கிருஷ்ணசாமி கண்டனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular