தென்காசி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அடுத்தடுத்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுமி ரிஹானா மேரி மற்றும் நர்மளா (27) உள்ளிட்ட 4 பேர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, டெங்கு பாதிப்பால் மேலும் சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




