குஜராத் முதலமைச்சராக 13 ஆண்டுகளும், இந்திய பிரதமராக 12 ஆண்டுகளும் நரேந்திர மோடி பதவி வகித்துள்ள நிலையில், இத்தனை ஆண்டுகளாக அவர் ஏன் ‘வந்தே மாதரம்’ பாடலை முழுமையாக பாடவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கார்கே, பாஜக ஆளும் மாநிலங்களிலும் ‘வந்தே மாதரம்’ பாடல் முழுமையாக பாடப்படாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், தற்போது ‘வந்தே மாதரம்’ பாடலை முன்னிறுத்தி பாஜக அரசியல் செய்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.




