காரைக்குடியில் நள்ளிரவில் கோர விபத்து: அதிவேக பைக் மோதி இளைஞர் பலி!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திங்கட்கிழமை நள்ளிரவில் அதிவேகமாக சென்ற பைக், எதிர்திசையில் வந்த மற்றொரு பைக்குடன் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் சித்திக் (38) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு வாலிபர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்கு முக்கிய காரணம் அதிவேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

தமிழக பின்னலாடை துறைக்கு தனி வாரியம்: நெசவாளர்களுக்கு 100% சூரிய மின்சார மானியம்!

Read Next

மேட்டூர் அணையில் இருந்து 3,000 கனஅடி காவிரி நீர் திறப்பு: சிக்கனமாக பயன்படுத்த முதல்வர் அறிவுறுத்தல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular