“100 நாட்களை கம்பீரமாக கடந்து சாதனை!” – தவெக அரசை பாராட்டிய சபாநாயகர்!
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (ஆக.17) மீண்டும் கூடியது. அப்போது பேரவையில் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், தவெக அரசு தனது 100 நாட்களை கம்பீரமாக கடந்து சாதனை படைத்துள்ளதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.




