
ஐபிஎல் ஆரம்பித்து லீக் போட்டிகள் முடிவுக்கு வரவிருக்கும் வேளையில் இப்போது ஒரு முக்கிய தகவல் இந்திய கிரிக்கெட் ஆணையத்திடம் இருந்து வந்துள்ளது. அதாவது காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தகதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர்பதற்றம் அதிகமாக இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இந்தியா, பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாத முகாம்களை குறி வைத்து தாக்கி பாகிஸ்தான் அரசை கோபமடைய வைத்திருக்கிறது.
இதனால் நேற்று தரம்சாலாவில் நடந்து கொண்டிருந்த ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டதும் நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். காரணம் ஒரு இடத்தில் அதிக மக்கள் கூடினால் வெளிச்சம் அதிகமாக இருக்கும். அந்த இடத்தில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த அதிக வாய்ப்பு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் வெளிநாட்டு சர்வதேச வீரர்களின் நலன் கருதி இன்று இந்திய கிரிக்கெட் ஆணையம் ஒன்றுகூடி ஒரு முடிவெடுத்துள்ளது.
அதாவது இனி நடக்கவிருக்கும் போட்டிகள் ஆனது தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாகவும் ஒரு வாரத்திற்கு பிறகு அந்த போட்டிகள் நடக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் வீரர்கள் மட்டுமின்றி மக்களின் பாதுகாப்பும் பாதிக்கப்படாது என்று அனைவராலும் நம்பப்படுகிறது.