திருவள்ளூரில் சூட்கேஸில் ஒரு பெண்ணின் சடலம் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் இன்று (நவ.5) சூட்கேஸில் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணையில் ஆந்திராவைச் சேர்ந்த தந்தை, மகள் இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது பாலியல் தொழிலில் மகளை ஈடுபடுத்த முயன்றதால் கொலை செய்ததாக தெரிவித்தனர். பின்னர் திடீர் திருப்பமாக நகைக்காக கொலை செய்துவிட்டு சடலத்தை சூட்கேஸில் தமிழகத்தில் விட்டு செல்ல முயன்றது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.




