
ஆத்துல ஒரு கால்.. சேத்துல ஒரு கால்..!! உண்மையான விளக்கம் தெரியுமா?..
பழமொழிக்கு உண்மையான அர்த்தம் என்னவென்று தெரியாமல் பலர் பலவிதமான கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் ‘ஆத்துல ஒரு கால்.. சேத்துல ஒரு கால்’ என்ற பழமொழிக்கு உண்மையான அர்த்தம் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
“அயத்தில் ஒரு கால்; செயத்தில் ஒரு கால்” என்பதே சரி.
அயம் என்றால் குதிரை என்று பொருள். செயம் என்ற சொல்லுக்கு பூமி வெற்றி என்றொரு பொருள் இருந்தாலும் இதற்க்கு பூமி என்று மற்றொரு பொருள் உண்டு. குதிரை ஏற்றம் கற்றுக்கொள்ள நினைக்கும் ஒருவன் குதிரையின் மீது ஒரு காலையும் நிலத்தின் மீது ஒரு காலையும் வைத்து குதிரை ஏற்றம் கற்றுக்கொள்ள முடியாது.