
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் போர் பதற்றம் இருந்து வந்த வேலையில் இப்போது போர் தொடங்கி இருக்கிறது. நாம் அனைவரும் இரவு நேரங்களில் நன்றாக இங்கு தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அங்கு நமக்காக ராணுவ வீரர்கள் கையில் துப்பாக்கி ஏந்தி சண்டையிட்டு வருகின்றனர். ராணுவ வீரர்களின் இந்த தியாகத்தை பார்த்து நிறைய பேர் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் பல மாநிலங்களில் தலைவர்கள் பேரணி நடத்தியும் வருகின்றனர். மேலும் இன்று தமிழக முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட செய்தியில் நாளை அதாவது மே பத்தாம் தேதி சென்னையில் ஒரு மிகப்பெரும் பேரனை நடக்கவிருக்கிறதாகவும் இதில் முன்னாள் ராணுவ வீரர்கள் முக்கிய தலைவர்கள் மாணவர்கள் போலீஸார்கள் கலந்து கொள்ளவிருக்கிறதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தப் பேரணி மாலை 5 மணியளவில் சென்னை காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து தீவு திடலில் இருக்கும் போர் நினைவுச் சின்னத்தின் முன்பு நிறைவு பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு பல பேர் ஆதரவு தெரிவித்தும் பாராட்டியும் வருகின்றனர்.