
எதில் அதிகம் சத்துள்ளது, இளநீர் அல்லது மோர்?
இளநீர் தான் அதிக சத்துள்ளது. அதற்காக மோரை குறைத்து மதிப்பிட வேண்டாம் .
இளநீர்
காலை வேளையில் இளநீர் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.
இது உடலுக்கு ஊக்கமும் சத்தும் தரும். தோல் பளபளப்பாகவும், சிவப்பாகவும் மாற தினமும் இளநீரை குடிக்க வேண்டும்.
கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது.
இத்துடன் முடி, நகங்கள் ஆரோக்கியமாக வளரவும் உதவுகிறது. இளநீர் இளமையைக் காக்கும் அரிய பானமாகும்.
இளநீர் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் நீர்சத்து குறைபாட்டை நீக்குகிறது. இது உடல் உள்ளுறுப்புகளை புத்துணர்ச்சியுடன் வைக்கிறது.
இதில் சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது. மந்தம், உணவு செரியாமை போன்றவற்றிக்கு இது மருந்து மற்றும் சிறந்த உணவும் ஆகும்.
காலரா நோயாளிகள் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறை இளநீரில் விட்டு அருந்தி வரவேண்டும். பித்தக் கோளாறு உள்ளவர்களுக்கும் இளநீர் இயற்கையான சத்து நிறைந்த மருந்து ஆகும்.
இது சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். மற்றும் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காலரா நோயாளிகளுக்கு நல்ல மருந்தாக உதவுகிறது.
மோர்
மோரில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக மோரில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளது.
பொதுவாக வெயில் காலங்களில்தான் மோர் தேவை அதிகமாக இருக்கும். மழை காலங்களில் மோர் குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால் மழை காலங்களிலும் பனி காலங்களிலும்தான் மோர் குடிக்க வேண்டும். காரணம் இவை செரிமானத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
வயிற்றுப் போக்கு: வயிற்றுப் போக்கால் கஷ்டப்படுபவர்கள், மோரில் இஞ்சி பொடி அல்லது நற்பதமான இஞ்சியை தட்டிப் போட்டு குடித்தால் குணமாகும். அதுவும் விரைவில் குணமாவதற்கு, ஒரு நாளைக்கு 3 முறை மோரைக் குடிக்க வேண்டும். இதனால் இரண்டே நாட்களில் வயிற்றுப்போக்கு பிரச்சனை குணமாகிவிடும்.