தேவையான பொருள்: மஞ்சள் பொடி 25 கிராம் கிச்சிலி கிழங்கு 10 கிராம் கசகசா 10 கிராம் கோரை கிழங்கு 10 கிராம் சந்தன தூள் 10 கிராம் செய்முறை: முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு எல்லா பொருட்களையும் தனித்தனியே ஒரு கல்வத்தில் இட்டு பொடியாக்கி கொள்ளவும். பொடியாக்கப்பட்ட பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்து கொள்ளவும். தேவையான அளவு இந்த பொடியை எடுத்துக்கொண்டு சிறிது நீரில் கலந்து உடல் முழுவதும் பூசி கொள்ளவும். பிறகு சாதாரண நீரில் குளித்து வந்தால் உடல் துர்நாற்றம் முற்றிலுமாக நீங்கும். மேலும் உடலில் கற்பூர மணம் தோன்றும். மற்றோரு வழி என்னவென்றால் துளசி செடியை நீரில் ஊற வைத்து அந்த நீரை குளித்து வந்தால் உடல் துர்நாற்றம் நீங்கும்.