
உடலுக்கு மட்டுமல்லாமல் முடி வளர்வதற்கும் கண் குறைபாடுகள் ஏற்படாமல் இருப்பதற்கும் கருவேப்பிலை சாப்பிடுவது நன்மை தரும்.
கருவேப்பிலையில் அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளதால் உடலில் உண்டாகும் நச்சுத்தன்மைகளை அழித்து விடுகிறது, மேலும் வளர்ச்சிதை மாற்றும் மற்றும் உடல் எடை குறைப்பதற்கு பெரிதும் உதவி புரிகிறது, உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது, கருவேப்பிலையில் வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளதால் கண்ணுக்கு தேவையான ஆரோக்கியத்தை தருகிறது, மேலும் கண்புரை நோய் வராமல் பாதுகாக்க கருவேப்பிலை பெரிதும் உதவுகிறது, முடிந்தவரை கருவேப்பிலை ஒதுக்காமல் உணவில் சேர்த்துக்கொள்வது நம் உடலுக்கும் ஆரோக்கியத்தை தரும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்..!!