பஹல்காமில் நடந்து தாக்குதலில் உயிரிழந்த கடற்படை வீரர் வினை நர்வாளின் 27 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் ஹரியானாவில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை அவரது தாயும் மனைவியான ஹிமன்ஷியும் சந்தித்தனர்.
செய்தியாளர்களிடம் எங்களுக்கு அமைதி வேண்டும் என்றும் அமைதி மட்டுமே வேண்டும் என்றும் அவர்கள் கூறியிருந்தனர். அதுமட்டுமில்லாமல் எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த தாக்குதலுக்காக காஷ்மீரிகளையும் இந்திய முஸ்லிம்களையும் யாரும் கண்டனம் தெரிவிக்க கூடாது என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு பிறகு காஷ்மீரிகளையும் இந்திய முஸ்லிம்களையும் விமர்சித்து நிறைய அரசியல் கட்சித் தலைவர்கள் மதசார்பு அரசியல் செய்து வருகின்றனர் என்று நமக்கு நன்றாகவே தெரியும். அதனை எடுத்து கடற்படை வீரரின் மனைவி இதை தெரிவித்துள்ளார்.




