கோதுமை மாவில் அடை செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா..!! அசத்தலான செய்முறை இதோ..!!

காலை மற்றும் இரவு உணவுகளில் அடிக்கடி இட்லி தோசை சாப்பிட்டு நாம் அனைவரும் சலித்து போய் இருப்போம். அதற்கு மாற்றாக நாம் செய்யும் உணவுகளும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். இன்று சுவையான மற்றும் சத்தான கோதுமை மாவில் அடை எப்படி செய்வது என்று காண்போம்.

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 2 கிண்ணம்,

ரவை – 4 கரண்டி,

பச்சரிசி மாவு – 4 கரண்டி,

உப்பு – தேவையான அளவு,

பூண்டு – 8 பற்கள்,

இஞ்சி – சிறிதளவு,

காய்ந்த மிளகாய் – 8,

சீரகம் – 2 கரண்டி,

கடுகு – 2 கரண்டி,

கடலை பருப்பு – 1 கரண்டி,

வெங்காயம் – 2,

கேரட் – 2,

தக்காளி – 2,

கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் கோதுமை மாவு ரவை பச்சரிசி உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். ஜாரில் பூண்டு சீரகம் இஞ்சி காய்ந்த மிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து அரைத்து மாவுடன் கலந்து கொள்ளவும். இதை ஒரு பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

ஒரு கடாயை எடுத்து அதில் எண்ணெய் சேர்த்து கடுகு கடலைப்பருப்பு, வெங்காயம், தக்காளி கேரட் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும். இவை அனைத்தையும் ஊறவைத்த கோதுமை மாவுடன் சேர்த்து கலக்கவும். அடுப்பில் தோசை கல்லை வைத்து அதில் இந்த கலவையை சேர்த்து தோசை போல வேகவிட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான கோதுமை அடை தயார்.

Read Previous

இந்த இனிப்பை உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்துப் பாருங்கள்..!! சுவையான மற்றும் சத்தான செய்முறை..!!

Read Next

முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular