
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமான விஜய் அவர்கள் தனது கட்சியை ஆரம்பித்த பிறகு அரசியலிலும் பரவலாக பல விஷயங்களை செய்து வருகிறார். அப்படி அவர் நடத்திய மாநாடு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் பெறும் பரபரப்பை உண்டாக்கியது. அதேபோல இந்த வருடம் ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதியும் 27 ஆம் தேதியும் மாநாடு ஒன்றை நடத்தியிருந்தார்.
இந்த மாதம் ஏப்ரல் 26 27 தேதிகளில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பூத் கமிட்டி கருத்தரங்கை கோவையில் நடத்தி இருந்தார். அதற்கு மக்கள் பெரும் வரவேற்பை கொடுத்து அவர் சென்ற பாதைகளில் எல்லாம் பெரும் ஆவாரம் செய்து வரவேர்த்தனர். இப்போது தமிழக வெற்றி கழகத்தின் அடுத்த பூத் கமிட்டி கருத்தரங்கை மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுரையிலிருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் இடம் பார்க்கும் பணி தொடங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த மே மாதம் பூத் கமிட்டி கருத்தரங்கம் அங்கு நடைபெறப் போகிறது. இதனால் மதுரையையும் திண்டுக்கல்லையும் சேர்ந்த தளபதி விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.