முன்பு இருந்த காலகட்டத்தில் மாரடைப்பு என்பது ஒரு அரிய வகை நோயாக இருந்தது. ஆனால் நாட்கள் நகர நகர வயதானவர்களுக்கு வரும் நோயாக மாறியது. இப்போது இன்னும் மோசமான நிலையில் அது இருக்கிறது. இதற்கு காரணம் நமது உணவு பழக்கம் தான். மேலும் சொகுசு வாழ்க்கையில் வாழ்ந்து உடலை உழைக்க வைக்காமல் இருப்பதும்தான்.
இதன் காரணமாக ஒரு நாள் முழுக்க உட்கார்ந்து பார்க்கும் வேலை நாள் முழுக்க நின்று கொண்டே பார்க்கும் வேலையை பார்த்தாலும் அது சார்ந்த பிரச்சினைகளும் நமது உடலில் வருகின்றன. இந்த நிலையில் இப்போது 18 வயது உள்ள இளைஞர்களுக்கு கூட மாரடைப்பு ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது.
இப்போது 39.8% பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதற்கு காரணம் துரித உணவுகளை உட்கொள்வது மதுப்பழக்கம் புகைப்பழக்கம் போன்றவை தான். இதன் காரணமாகத்தான் இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு நிறைய பேர் உயிரிழக்கின்றனர்.




