“சோறு வரும் வழி”.. கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

*சோறு வரும் வழி:*
01. வயல் காட்டைச் சீர்செய்தல்
02. ஏர் பிடித்தல்
03. உழவு ஓட்டுதல்
04. பரம்படித்தல்
05. விதை நெல் சேகரித்தல்
06. விதை நேர்த்தி செய்தல்
07. விதைகளை நீரில் ஊற
வைத்தல்
08. நாற்றங்காலில் விதைத்தல்
09. நாற்றாக வளருதல்
10. நாற்று எடுத்தல்
11. முடிச்சு கட்டுதல்
12. வயல் நிலத்தில் முடிச்சு வீசுதல்
13. நடவு நடுதல்
14. களையெடுத்தல்
15. உரமிடுதல்
16. எலியிடம் தப்புதல்
17. பூச்சியிடமிருந்து பாதுகாத்தல்
18. நீர் தட்டுப்பாடு இன்றி வளருதல்
19. கதிர் முற்றுதல்
20. கதிர் அறுத்தல்
21. கட்டு கட்டுதல்
22. கட்டு சுமந்து வருதல்
23. களத்துமேட்டில் சேர்த்தல்
24. கதிர் அடித்தல்
25. பயிர் தூற்றல்
26. பதறுபிரித்தல்
27. மூட்டை கட்டுதல்
28. நெல் ஊறவைத்தல்
29. நெல் அவித்தல்
30. களத்தில் காயவைத்தல்
31. மழையிலிருந்து பாதுகாத்தல்
32. நெல் குத்துதல்
33. நொய்யின்றி அரிசியாதல்
34. அரிசியாக்குதல்
35. மூட்டையில் பிடித்தல்
36. விற்பனை செய்தல்
37. எடை போட்டு வாங்குதல்
38. அரிசி ஊறவைத்தல்
39. அரிசி கழுவுதல்
40. கல் நீக்குதல்
41. அரிசியை உலையிடல்
42. சோறு வடித்தல்
43. சோறு சூடு தணிய வைத்தல்
44. சோறு இலையில் இடல்
இத்தனை தடைகளைத் தாண்டி வந்த சோற்றை நாம் முழுவதும் உண்ணாமல் வீணாக்குவது உலகமகா பாவம்.
உண்ணும் முன் உணருவோம்,
அந்த உணவு நம் இலைக்கு வந்த பாதையையும், அதன்பின்னுள்ள
உழவனின் உழைப்பையும்.!…..
“உணவை வீணாக்காமல் பருகுங்கள்”

Read Previous

மறுபிறவி என்பது உண்மையா? இல்லையா?.. அதிர வைக்கும் உண்மைகள்..!!

Read Next

காதலியை கொடூரமாக கொன்ற 50 வயதான காதலனுக்கு ஆயுள் தண்டனை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular