வெட்டிவேர் பயன்படுத்துவதன் மூலம் நமது உடலில் உள்ள கபம் பித்தம் விலகி உடல் ஆரோக்கியம் அடையும்..
வெட்டிவேர் இயற்கை மூலிகை தன்மை கொண்டதாகும் வெட்டிவேர் பயன்படுத்துவது உடலுக்கு எண்ணற்ற சக்தியை தருகிறது அந்த வகையில் வெட்டிவேரின் எண்ணையைக் கொண்டு நீண்ட நாளாக ஆறாமல் இருக்கும் புண்கள் மீது தடவினால் அவை விரைவில் மறைந்து விடும் என்றும் இந்த எண்ணெயை உடலில் தேய்த்து குளிக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், வெட்டிவேருடன் தண்ணீர் சேர்த்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் உலரவிட்டால் முகப்பருக்கள் நீங்கி முகம் அழகாக மாறிவிடும் என்று நமது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர் பருக்கள் மறைந்தாலும் சில ஒரு சிலருக்கு பருக்கள் இருந்த தழும்புகள் மட்டும் போகாது இதற்கு வெட்டிவேரை சிறு துண்டுகளாகி வெந்நீரில் போட்டு ஒரு நாள் இரவு ஊற வைத்து மறுநாள் நன்றாக கொதிக்க வைத்து அந்த நீரில் ஆவி பிடித்தால் முகத்தில் உள்ள பருக்களின் வடுக்கள் மறைந்துவிடும் என்று கூறப்படுகிறது, அது மட்டுமல்லாமல் வெட்டிவேரை அரைத்து சீகக்காய் உடன் கலந்து தலையில் தேய்த்து குளித்து வருவதன் மூலம் தலையின் உள்ள பித்தங்கள், பொடுகு தொல்லை நீங்கி தலைமுடி நன்றாக வளரும் என்றும் நமது முன்னோர்கள் கூறுவது வழக்கம்…!!




