இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை போதை பொருட்களுக்கு அடிமை ஆவதனால் நுரையீரல் பாதிப்பு விரைவில் அடைகிறது இதனால் நுரையீரல் செயல்பாட்டு தன்மை குறைந்து நுரையீரலில் தொற்றுகள் ஏற்படுகிறது மேலும் நுரையீரல் முழுவதும் பழுதடைந்து ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது..
நுரையீரல் பாதிப்படைப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் இவை எல்லாம் நுரையீரலை முழுவதும் பாதிப்படையை செய்கிறது, ஆனால் நுரையீரல் பிரச்சனையை சரி செய்வதற்கு இந்த கசாயத்தினை குடித்து வரலாம், வெற்றிலை ஒன்று 10 மிளகு 5 கிராம்பு சிறு துண்டு இஞ்சி ஆகியவற்றை இடித்து பின்னர் அந்த விழுதினை ஒரு பாத்திரத்தில் போட்டு அரை ஸ்பூன் மஞ்சள் மற்றும் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து 100 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்த்து எட்டு நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும் பின் வடிகட்டிய கசாயத்தை வாரத்தில் ஒரு முறை வெறும் வயிற்றில் குடித்து வந்தாலே மூச்சு வாங்குவது சளி பிடிப்பது ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் நுரையீரல் பக்கமே வராது..!!




