பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம்..!! சென்னையில் எட்டு பேர் சரண்..!!

பகுஜன் சாமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவராக பதவி வகித்து வருபவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னையில் வசித்து வருகிறார். நேற்று சென்னை பெரம்பலூரில் உள்ள அவரது வீட்டில் ஆறு பேர் கொண்ட மர்ம கும்ப கும்பலால் அவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இந்த தகவலின்  அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பூர் காவல்துறையினர் ஆம்ஸ்ட்ராங்யை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.ஆம்ஸ்ட்ராங்  சிகிச்சை பலனின்றி பரிதாபமாய் உயிர் இழந்துள்ளார். இந்த கொலை சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பகுஜன் சாமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங்  கொலை வழக்கில் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் இதுவரை எட்டு பேர் சாரண் அடைந்துள்ளனர் என  கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியளரிடம்   பேசிய அவர் கூறியிருப்பது “பகுஜன் சாமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்  கொலை வழக்கில் இதுவரை 8 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றோம். இது முதல் நிலை விசாரணை. விசாரணையை மேற்கொண்டு தீவிரப் படுத்துவதினால்  கொலை குறித்த முழுமையான காரணம் தெரியவரும். பத்து தனி படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது இந்த கொலை சம்பவத்தில் சில கூறிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது பிரேத பரிசோதனைக்கு பின் முழுமையான தகவல் கிடைக்கும்”, என தெரிவித்துள்ளார்.

Read Previous

படுக்கையறையில் மனைவி செய்யும் இந்த தவறுகள் கணவனை அப்செட் ஆக செய்கிறதாம்..!!

Read Next

உங்கள் கண்களை பாதுகாக்க அருமையான சில டிப்ஸ்..!! இதோ உங்களுக்காக..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular