பூஜை அறையில் பூஜை செய்பவர்கள் பலகையில் உட்கார்த்துதான் பூஜை செய்ய வேண்டும். தரையில் அமரக்கூடாது. பூஜை அறையில் அரிசி மாவால் கோலம் போடுவது மிகவும் சிறப்பு உடையதாகும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தாமரைக் கோலம் போடலாம். பிரதோஷத்தன்று சிவபெருமானை வழங்கும் விதமாக சிவலிங்க கோலமும் சனிக்கிழமை என்று சங்கு கோலம் போடலாம். பூஜை முடிந்ததும் கல்கண்டு அல்லது கிஸ்மிஸ் அல்லது பால் போன்றவற்றை விவேதனம் செய்ய வேண்டும். பண்டிகை நாட்களில் பூஜை அறையில் மாவிலைகளால் தோரணம் கட்டுவது மிகவும் சிறப்புடையதாகும். பூஜை அறை கோலங்களை துளி கொண்டு தான் துடைக்க வேண்டும்.
பூஜை அறையில் சந்தனம் மற்றும் குங்குமம் மற்றும் விபூதி கட்டாயமாக இருக்க வேண்டும் தினமும் புது சந்தனம் தயார் செய்ய வேண்டும். ஊதுபத்திகளை ஸ்டாண்டில் தான் வைக்க வேண்டும் ஒரு பித்தளை தாம்பாளத்தில் வைத்து ஏற்றால் சாம்பல் கீழே விழாது. விளக்கை பித்தளை தாப்பாலத்தில் அல்லது பலகையின் மீதுதான் வைக்க வேண்டும். பூஜை அறையில் பயன்படுத்தப்படும் எல்லா சாமான்களும் பித்தளை அல்லது வெள்ளியில் இருக்க வேண்டும்.
பூஜை அறை இருக்கும் இடம் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்:
வடகிழக்கு திசையானது பூஜை அறை காட்ட சிறந்த திசையாக கருதப்படுகிறது. ஏனெனில் அது சிவனின் இடம் என்று கருதப்படுவதால் அது மிகவும் மங்களகரமானதாகும் அதைத்தொடர்ந்து கிழக்கு அல்லது வடக்கு திசை கருதப்படும்.தென் திசையை நோக்கி உள்ள பூஜை அறைக்கான வாஸ்து மங்களகரமானதாக கருதப்படுகிறது.




