மாணவர்களுக்கு குஷியோ குஷி..!! நாளை (03.12.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!! அரசு திடீர் உத்தரவு..!!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “ஃ பெஞ்சல்” புயலாக மாற்றம் அடைந்த நிலையில், சென்னையில் இருந்து மேற்கு திசை நோக்கி நகர்ந்த புயலானது, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து விடாமல் கனமழை பெய்து வருகிறது. அவ்வாறு தொடர்ந்து பெய்யும் மழையின் எதிரொலியாக சில மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள பகுதிகள் குளம் போல் காட்சியளிக்கின்றன . இதனால் அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(03.12.2024) விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.




