வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!!

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது இதன் காரணமாக சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் டெல்டா உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் 14-15 ஆகிய தேதிகளில் பரவலாக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது தென் தமிழகம் டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது ஆனால் மாநில முழுவதும் பரவலாக மழை தொடங்கவில்லை, இதற்கிடையே தென்மேற்கு வங்கு கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த ஒன்பதாம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று கணிக்கப்பட்டது, ஆனால் அவ்வாறு உருவாகாமல் தாமதம் ஆகி வந்தது இந்நிலையில் தென்கிழக்கு வங்க கடலில் நேற்று மதியம் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பது தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்று தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு திசையில் தமிழகம் இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி மெதுவாக நகர கூடும் இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் நாளை முதல் பெரும்பாலான இடங்களிலும் இடியுடன் மழை பெய்யும் என தெரியவந்துள்ளது..!!

Read Previous

அன்றைய முதியோர்களும்..!! இன்றைய தலைமுறையினரும்..!!

Read Next

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய திருநங்கைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular