வயநாடு நிலச்சரிவு: உயிரை பணையம் வைத்த ராணுவ வீரர்கள்..!! 3ம் வகுப்பு மாணவரின் நெகிழ்ச்சி கடிதம்..!!

கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவினால் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தொடர்ந்து 7 வது நாளாக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த 3-ம் வகுப்பு படிக்கும் ரையான் என்ற சிறுவன் இந்திய ராணுவத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், அன்புள்ள இந்திய ராணுவமே, எனது அன்புக்குரிய வயநாடு மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி, பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை நீங்கள் மீட்பதைக் கண்டு நான் பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தேன். நீங்கள் ஒரு பாலம் கட்டிய காட்சி என்னை மிகவும் கவர்ந்தது. நானும் ஒரு நாள் இந்திய ராணுவத்தில் சேர்ந்து என் தேசத்தை பாதுகாக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Read Previous

கஷ்டங்களைப் போக்கும் கால பைரவர் வழிபாடு..!! பூஜை செய்ய உகந்த நேரமும் முறையும்..!!

Read Next

டிராவிட்டின் சாதனையை தகர்த்த ரோகித் சர்மா..!! என்ன சாதனை தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular