Oplus_131072
அசத்தலான சமையல் டிப்ஸ்..!! இல்லத்தரசிகளே உங்களுக்கான பதிவு தான் இது கண்டிப்பா படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!
இல்லத்தரசிகளே கண்டிப்பாக இந்த சமையல் குறிப்புகள் எல்லாம் தெரிஞ்சு உங்க வீட்லயும் ட்ரை பண்ணி அசத்துங்க.
சமைக்கும்போது காளான் கருகாமல் இருக்க ஒரு டீஸ்பூன் மைதாவை இரண்டு டம்ளர் தண்ணீரில் கரைத்து அதில் அரிக்கிய காலனை நன்கு அலசி எடுத்து சமைத்தால் காளான் கருகாது.
அதுமட்டுமின்றி குழம்பு வைக்கும் போது உப்பு அதிகமாகிவிட்டால் ஒரு டீஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு டீஸ்பூன் தனியாத்தூள் சிறிதளவு சோம்புத்தூளை நீரில் கலந்து குழம்பில் சேர்த்து மீண்டும் ஒருமுறை கொதிக்க வைத்து இறக்கினால் உப்பின் சுவை குறையும். ரசம் தயாரிக்கும் போது கடைசியாக நெய் சேர்த்து தாளித்தால் சுவை அதிகரிக்கும்.
ரசப்பொடிக்கு அரைக்கும் பொருட்களுடன் 10 திப்பிலிகளையும் வறுத்து சேர்த்து அறைத்தால் நல்ல மனதுடன் வயிற்றுக் கோளாறுகளையும் நீக்கும். பாகற்காயின் கசப்பை போக்க புளிக்கு பதிலாக சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்க்கலாம்.




