மீதமுள்ள சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்தால் பழைய சோறு தயாராகி விடும். இதை மறுநாள் காலையில் தயிர், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
பழைய சோற்றில் உள்ள விட்டமின் சி ஆனது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
தினமும் காலையில் இதை சாாப்பிட்டால் எப்போதும் இளமையான தோற்றதுடன் இருக்கலாம்.
வெப்பத்தினால் ஏற்படும் வயிற்று கோளாறு பிரச்சினையை பழைய சோறு சாப்பிடுவதால் தடுக்கலாம்.
நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சினையில் இருந்து விடுப்படலாம்.
தினமும் சாப்பிட்டு வருவதால் உடல் சோர்வு குறைந்து எப்போதும் உற்சாகத்துடன் இருக்கலாம்.
என்றும் இளமையாகும் பொலிவாகவும் இருப்பதற்காக இதை சாப்பிடலாம்.
இதை காலையில் எடுத்துக்கொள்வதால் செரிமான பிரச்சினைக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.
உடல் எடையை குறைக்க அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் இதை சாப்பிடலாம்.




