பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமத்தில் பிரவீணா என்பவர் கொலை வழக்கில் கணவர் ராஜ்குமார் சிக்கியுள்ளார். வழிப்பறி தாக்குதல் என நாடகமாடிய அவர், தனது அண்ணி ஆனந்தியுடன் இருந்த முறையற்ற உறவை தொடர மனைவியை கொல்ல திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்தது. ஆனந்தியின் உறவினர் தீபக்குக்கு பணம் கொடுத்து தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று கொலை செய்தது அம்பலமானது. ஆதாரங்களின் பேரில் ராஜ்குமார், ஆனந்தி உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.




