அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கக்கோரி ராமதாஸ் தரப்பு ஆகஸ்ட் 19ல் நோட்டீஸ் அனுப்பியது. பதிலளிக்க நேற்றுடன் (ஆக.31) அவகாசம் முடிந்த நிலையில், அன்புமணி விளக்கம் ஏதும் அளிக்கவில்லை. இதையடுத்து பாமக ஒழுங்குக்குழு நடவடிக்கைக் குழு, அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாளை பாமக மாவட்ட தலைவர்கள், செயலாளர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்த உள்ளார். அன்புமணியின் கட்சி பதவி பறிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.




