அப்பாவை தவிர்த்து, நமக்கு நல்ல நடத்தை மற்றும் வாழ்க்கை பாடங்களை வேறு எந்த ஆசானாலும் முழுமையாக கற்பிக்க முடியாது.
அம்மாவின் அன்பு கடல் அலைகள்போல் எப்போதும் வெளிப்படையாக இருக்கும். ஆனால் அப்பாவின் அன்பு நடுக்க கடல் போன்றது, வெளியே தெரியாமல் இருக்கலாம், ஆனால் அதன் ஆழம் அளவிட முடியாதது.
அப்பா எனைக் கொண்டே இல்லாமல், என் கனவுகளையும் தன் தோளில் சுமந்து செல்லும் என் வாழ்வின் நிஜ ஹீரோ.
நாம் உயரத்தை அடைய தன்னை ஏணியாக்கி கொள்பவர் தந்தை.
அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் மகளுக்கு அப்பா அடிமையென்று.
நம் வாழ்க்கையை விருச்சமாக்க தன்னை வேராக்கி கொண்டவர் தந்தை.
உலகிலேயே அதிக பாதுகாப்புமிக்க இடம் தந்தையின் கை.
தாயின் கருவறைபோலவே, நாம் விழும்போது தாங்கிக்கொள்ளும் அப்பாவின் தோள்களும் புனிதமானவை.
அம்மாவின் அரவணைப்பு மற்றும் அப்பாவின் ஆதரவுடன் இருக்கும்போது, நாம் ஒருபோதும் விழுவதில்லை.
பிள்ளைகள் வேண்டியதை வழங்கும் ஆனந்தமே அப்பாவின் மனதிற்கு சந்தோஷம் தருகிறது.
குழந்தையாக இருந்த போது உன் கைகளில் பாதுகாப்பாக வாழ்ந்த அந்த தினங்கள் மீண்டும் வராதது என் மனதை வலிக்கச் செய்கிறது, அப்பா.
தன் தலைமீது நம்மை அமர்த்தி உலகத்தை அழகாக பார்க்கச் செய்த அப்பாவை, நாங்கள் ஒருபோதும் தலைகுனிய விடக் கூடாது.
நம்மை தூக்கி அணைக்க முடியாமல் நீ தவித்த போது, உன் கண்களின் வலியும் பாசமும் என் இதயத்தை உருக்குகின்றன, அப்பா.
தன் மூச்சு உள்ளவரை நமக்காக உயிர் வாழும் ஒரே உறவு “அப்பா” தான்.
அப்பா நமக்காக செய்த அனைத்தையும் உணர்வதற்கு, வாழ்க்கையின் ஒரு பகுதியை நாமே கடக்க வேண்டி இருக்கிறது.
அன்பை வார்த்தைகளால் சொல்வதற்குப் பதிலாக, உழைப்பின் மூலம் காட்டும் ஒரே உறவு “அப்பா” தான்.
தாய் நமக்காக கஷ்டப்படுவதை நாம் எளிதாக கவனிக்கலாம், ஆனால் தந்தை எடுத்த உழைப்பை உணர்வதற்கு மற்றவர்களிடம் கேட்க வேண்டிய நேரம் வருகிறது.
உண்மையாக உழைத்து நிற்கும் போது தான், அப்பாவின் தோளில் நாம் சுமத்திய பாரத்தை அவர் எவ்வளவு வலியுடன் கடந்திருப்பார் என்பதை உணரலாம்.
அப்பாவின் அன்புக்கு ஈடான அன்பு இந்த உலகில் எதுவும் இல்லை.
கண்ணுக்கு தெரியாத கடவுளைப் போல், கண்ணுக்கு தெரிந்தும் புரிந்து கொள்ளாத ஒரே கடவுள் “அப்பா”.
செதுக்கப்பட்ட சிலைகள் கடவுள் எனில், எனக்கு அப்பாவும் கடவுளே. அடித்தாலும், அன்பால் அணைக்கும் கடவுள் “அப்பா”.
சில நேரங்களில், பல வலிகளை மறக்க அப்பாவின் சொற்கள் மட்டுமே போதுமானவை.
நாம் தவறான பாதையில் சென்றால் தடுக்க முதலில் ஓடிவரும் உறவு “அப்பா” தான்.
அப்பாவும் அவரது பாசமும்
அப்பாவுக்கு அன்பை வெளிப்படுத்தத் தெரியாது என நினைத்தேன், ஆனால் அவர் தாத்தாவான பின்பே அவரின் பாசம் வெளிப்படுவதை கண்டேன்.




