கேரள மாநிலம் கொச்சி அருகே தொடுபுழாவிலிருந்து எர்ணாகுளம் நோக்கி சென்ற அரசு ஏசி பேருந்து, திடீரென தீப்பிடித்து எரிந்தது. சில நிமிடங்களில் தீ மளமளவெனப் பரவி பேருந்து முழுவதும் பற்றி எரிந்துள்ளது. இதையடுத்து உடனடியாக பேருந்திலிருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த சம்பவம் பயணிகள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




