பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், பல லட்சம் ஊழியர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அதன் ஊழியர்களுக்கு தற்போது முக்கியமான அறிவிப்பு ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது, “வீட்டில் இருந்து வேலை செய்யும் நாட்களை கட்டுப்படுத்த, மாதத்தில் குறைந்தது 10 நாட்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும்” என்று தற்போது உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த புதிய நடைமுறைகள் வருகின்ற மார்ச் 10 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், இதற்காக நிறுவனத்தின் வருகை பதிவு மென்பொருளில் மாற்றங்கள் செய்து வருவதாகவும் கூறியுள்ளது. குறிப்பாக, இந்த புதிய நடைமுறையால் JL5 மற்றும் அதற்கு கீழ் பணிபுரியும் 3.23 லட்சம் இன்போசிஸ் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




