மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளான இன்று (ஆக.25) தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர். சென்னையில் பொதுமக்கள், பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிரேமலதா, இன்று தமிழகம் முழுவதும் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், தேமுதிக அலுவலகத்தில் இன்று 8,000 பேருக்கு உணவு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.




