கோடைகாலம் ஆரம்பித்து வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாகவே இருக்கிறது. மார்ச் மாதம் முதலே வெயில் கொளுத்த ஆரம்பித்ததில் இப்போது அது இன்னும் கடுமையாக மாறியிருக்கிறது. இதனால் மக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது IMD ஒரு முக்கிய அறிவிப்பை மக்களுக்கு தெரிவித்துள்ளது.
இன்று இயல்பை விட வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என IMD எச்சரித்துள்ளது. அதிக வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் இருக்கின்ற காரணத்தினால் சிரமம் ஏற்படலாம். இதன் காரணமாக பிற்பகல் 11 மணி முதல் 3 மணி வரை இன்று யாரும் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டியது முக்கியம். அதுமட்டுமில்லாமல் அதிக அளவில் நீர் மோர் இளநீர் போன்றவற்றை குடிக்க வேண்டும்




