மத்தியப்பிரதேசத்தில் இருமல் மருந்து உட்கொண்ட 22 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில்
இந்திய மருத்துவ சங்கம் விளக்கம் அளித்துள்ளது. இந்த மருந்தில் டைஎத்திலீன் கிளைக்கால் (டிஇஜி) என்ற நச்சுப்பொருள் அதிக அளவில் கலக்கப்பட்டதே காரணம் என மாநிலத் தலைவர் பி.செங்குட்டுவன் தெரிவித்தார். டிஇஜி பொருள் ஐஸ் கட்டி, அழகுசாதனப் பொருட்கள், பெயிண்ட் தயாரிக்க மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், இருமல் மருந்தில் கலந்ததால் குழந்தைகளின் நரம்பு மண்டலம், நுரையீரல், சிறுநீரகம் செயலிழந்ததாகவும் விளக்கமளித்தார்.




