கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். அதனால் நம் வீட்டில் எப்போதும் மின்விசிறி இயங்கிக் கொண்டே தான் இருக்கிறது. ஏனெனில் இப்போதுள்ள வெயிலுக்கு ஒரு நிமிடம் கூட காற்று இல்லாமல் நம்மளால் இருக்க முடியாது. ஆனால் அப்படி மின்விசிறியை தொடர்ந்து இயக்கி வந்தால் பிரச்சனைகள் வரலாம் என நிபுணர்கள் கூறியுள்ளனர். அதைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.
இந்த சுட்டெரிக்கும் வெயிலில் நம்மால் மின்விசிறியோ அல்லது AC யையோ உபயோகிக்காமல் இருக்க முடியாது. ஆனால் நம் வீட்டில் இருக்கும் மின்விசிறிகளை 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தொடர்ந்து உபயோகித்தால் பெரும் பிரச்சனை வரும். அப்படி உபயோகிக்கும் போது வயரிங் அல்லது காயலில் ஏதேனும் கோளாறு ஏற்படலாம் என கூறப்படுகிறது.
ஆகையால் மின்விசிறிகளை பயன்படுத்துகின்ற பொழுது 5 மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு மணி நேரம் அதை இயக்காமல் இருப்பது மிகவும் நன்று. கோடை வெயிலின் தாக்கத்திற்கு பயந்து உயிரை விட்டு விடாதீர்கள்.



