இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் உடலில் ஏற்படும் துர்நாற்றத்தினால் அவதிப்பட்டு வருகிறனர், வெளியில் போகும் போது துர்நாற்றத்தினால் அவர்கள் பெரும் அவதியை உணர்கின்றனர் மேலும் மற்றவர்களோடு பேசும்பொழுது சிரமத்திற்கு ஆளாகுகின்றனர் அவர்களுக்கு இதுவே சிறந்த தீர்வாக அமையும்..
தினமும் இரண்டு வேலை சோப்பு பயன்படுத்தி குளிக்க வேண்டும் இதனால் சருமத்தில் உள்ள வியர்வை மற்றும் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு உடல் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும், மேலும் நல்ல காற்றோட்டமாக இருக்கும் கட்டத்தில் அல்லது லெனின் உடைகளை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும் வியர்வை எதிர்ப்பு மருந்துகள் மற்றும் டியோடரணடுகளைப் பயன்படுத்தலாம், அதேபோல் அதிக அளவு நீரை குடிக்க வேண்டும் இதனால் உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு உடல் துர்நாற்றம் வீசுவது குறையும், மேலும் காய்கறிகள் கீரைகள் சாப்பிடுவது மூலம் நமது உடலில் ஏற்படும் துர்நாற்றங்கள் நிவர்த்தியாகி உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் இருக்கும், வாரத்தில் ஒரு நாள் வேப்ப இலை மஞ்சள் நொச்சி இலை ஆகியவற்றை பயன்படுத்தி சுடு தண்ணீர் கொதிக்க வைத்து குளிப்பதன் மூலம் உடலில் ஏற்படும் நச்சுத்தன்மை வாய்ந்த பாக்டீரியாக்கள் அழிந்து உடல் துர்நாற்றம் அடைவதை நீக்கி ஆரோக்கியமாக இருக்கும்..!!




