பெரும்பாலானோர் வீட்டில் எலி தொல்லை கரப்பான் பூச்சி தொல்லை ஆகியவை அதிகமாக இருக்கும். இதன் காரணத்தினால் பல பேர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மேலும் இது நமது வீட்டில் தங்குவதால் மோசமான துர்நாற்றமும் ஏற்படுகிறது. அது மட்டும் இலலாமல் எலிகள் வீட்டில் தங்கினால் மனிதர்களுக்கு பல நோய்கள் வரக்கூடும். எலிகளை சுலபமாக வீட்டில் இருந்து எப்படி விரட்டுவது என்று இந்த பதிவில் காண்போம்.
இதை செய்ய எருக்கம் செடி இலைகளை பயன்படுத்தலாம். சிறிதளவு இந்த இலைகளை எடுத்துக் கொண்டு தட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி தட்டி எடுக்கப்பட்ட இலைகளை எலிகள் வரும் பகுதியில் வைத்திருக்க வேண்டும். எலிகளுக்கு இந்த வாசனை சுத்தமாக பிடிக்காது.
இந்த வாசனையை எலிகள் கண்டறிந்தால் அந்த வீட்டை விட்டு சுலபமாக வெளியேறிவிடும். இதனை செய்தாலே போதும் உங்களுக்கு ஏற்படும் ஒரு பெரிய பிரச்சினை நீங்கிவிடும்.




