ஏதேனும் சாப்பிட கேட்கும் குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்துப் பாருங்கள்..!! சுவையான மற்றும் சத்தான செய்முறை..!!

xr:d:DAFwafluHtw:37,j:4847404175779957437,t:23100518

கோடை விடுமுறையில் குழந்தைகள் அனைவரும் அதிகமாக தின்பாண்டம் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி ஏதேனும் சாப்பிட கேட்கும் குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்துப் பாருங்கள். கர்நாடக மாநிலத்தின் சத்து நிறைந்த பாரம்பரிய உணவாக இது கருதப்படுகிறது. இன்று பருப்பு உருண்டை எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.

தேவையான பொருள்கள் :

துவரம் பருப்பு – 2 கிண்ணம்

தண்ணீர் – 1 லிட்டர்

பச்சை மிளகாய் – 10

இஞ்சி – சிறிதளவு

தேங்காய் துருவல் – 1 கிண்ணம்

வெந்தய இலை – 2 கிண்ணம்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

சீரகம் – 2 தேக்கரண்டி

செய்முறை : 

முதலில் வெந்தய இலைகளை பொடிப்பொடியாக நறுக்க வேண்டும். துவரம் பருப்பை கழுவி 5 மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும். அடுத்து மிக்ஸியில் பச்சை மிளகாய் இஞ்சி ஊறவைத்து துவரம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த மாவை தேங்காய் துருவல் வெந்தய இலை உப்பு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடேற்றி இட்லி தட்டின் மீது இந்த கலவையை பந்து போல உருட்டி வேகவைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான பருப்பு உருண்டை தயார்.

Read Previous

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்-யில் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! ரூ.50,000 வரை மாத ஊதியம்..!!

Read Next

NTPC நிறுவனத்தில் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! ரூ.71,000 மாத ஊதியத்துடன் அடித்த ஜாக்பாட்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular