கேரள மாநிலம் ஆலப்புழாவில் ஐபோன் மற்றும் பைக் வாங்குவதற்காக 67 வயது முதியவர் சிவன்குட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில், அவரது 13 வயது பேத்தி உள்ளிட்ட 4 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் விசாரணையில், பேத்தியின் 17 வயது காதலன் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் சேர்ந்து முதியவரை கொலை செய்து, வீட்டில் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்ததாக தெரியவந்துள்ளது.
மேலும், பேத்தி வீடியோ காலில் இருந்தபடியே கொலை சம்பவத்தை ஒருங்கிணைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




