சேலம் வழியாக செல்லும் திருவனந்தபுரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. இந்த ரயிலில் ரிசர்வ் பெட்டி ஒன்றில் 25 வயதுடைய கேரள மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பயணம் செய்தார். இந்த ரயில் நேற்று அதிகாலை சேலம் அருகே வந்து கொண்டிருந்தபோது அந்த பெட்டியில் பயணம் செய்த முதியவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், திருவள்ளூரை சேர்ந்த அருளானந்தம் (63) என்பவரை கைது செய்தனர்.




