கடந்த மாதம் 6ம் தேதி, திருப்பத்தூர் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே, ஓடும் ரயிலில் நான்கு மாத கர்ப்பிணி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார். ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டு, படுகாயத்துடன் உயிர் பிழைத்தார். இச்சம்பவத்தில் வேலூர் பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேம் ராஜ் (27) என்பவர் கைதானார். இந்நிலையில் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின்படி அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.




