ஓமவள்ளி இலையை பயன்படுத்தும் மூலம் தலைவலி ஜலதோஷம் வயிற்று பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர், மேலும் இதனை பயன்படுத்தும் முறையை சரியான வகையில் கையாளும் பொழுது இதனுடைய தீர்வை விரைவில் காண முடியும்..
ஓமவள்ளி இலையிலிருந்து சாற்றை எடுத்து அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து நெற்றியில் பற்று போட்டால் ஜலதோஷம் தலைவலி மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்கும், மேலும் அதேபோல் நீங்கள் அதிகப்படியான கபம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த இலையை அரைத்து தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும் இவற்றுடன் ஏலக்காய் கிராம்பு ஒரு டீஸ்பூன் தேன் ஆகியவற்றை நன்கு கலந்து தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் கபத்தில் இருந்து விடுபட முடியும், மேலும் இந்த கசாயத்தை மூன்று நாட்கள் குடித்து வந்தால் விரைவில் நல்ல முடிவை காண்பீர்கள் அது மட்டுமன்றி இந்த இலையை தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடித்தாலும் நல்ல தீர்வு கிடைக்கும் என்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!




